tamilnadu

img

கேபிஎல் சூதாட்டம்  கர்நாடக கிரிக்கெட் சங்க உறுப்பினர் கைது

 தமிழகத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடரைப் போன்று கர்நாடகத்தில் கேபிஎல் என்ற பெயரில் உள்ளூர் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் சூதாட்டம் நிகழ்ந்ததாக பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அஷ்பக் அலிதர், பெல்லாரி டஸ்கர்ஸ் கேப்டன் சி.எம்.கவுதம் மற்றும் சக அணி வீரர் அப்ரார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் சுதிந்திரா ஷிண்டே (39) வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் செவ்வாயன்று சோதனை நடத்தினர்.இதனடிப்படையில் சுதிந்திரா ஷிண்டே புதனன்று கைது செய்யப்பட்டார்.    சுதிந்திரா ஷிண்டே கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக பிரிவில் உறுப்பினராக வும், 19 வயதுக்குட்பட்ட கர்நாடக அணியின் பயிற்சியாளராகவும்,  உள்ளார். மேலும் பெலகாவி பாந்தர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் இந்த ஷிண்டே தான் என்பது குறிப்பிடத்தக்கது.